"நீங்கள் இளைப்பாருவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ் தான் படைத்தான், நிச்சியமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை" (அல்குர் ஆன் - 40:61)
நம்மை மனிதனாய் படைத்தான், பிறகு இஸ்லாமிய சமுகத்தில் பிறக்க செய்தான்.. பிறகு உம்மத்களிலே சிறந்த உம்மத்தான நமது முகமது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தாக படைத்தானே அவன் தான் இறைவன். அவன் ஒருவன் தான் உருவமற்றவன். அவனே அல்லாஹ்..
நம்மீது எவ்வளவு அருளை தந்து இருக்கிறான் , கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் ... ஆம் நம் உடல் அமைப்பு, கண்,காது, இதயம், மூளை, என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த உறுப்புக்களையெல்லாம் படைத்து அதன் வேலைகளை சீராய் அமைத்த அந்த அல்லாஹ்க்கு நாம் எவ்வாறு நன்றி செலுத்துகிறொம்..
நாம் குறிப்பாக தொழுகை மூலம் நன்றி செலுத்துவது :
ஒவ்வொரு வயது வந்த ஆண்/பெண் இஸ்லாமியருக்கு கடமையாக்கப்பட்ட
ஐவேளைத் தொழுகைமூலம் தான்.
அதாவது 24 மணி நேரத்தில் 5 * 5 நிமிசம் என்றால் 25 நிமிசம்தான்.. குறைவுதான் நமது நன்றிகள் அவனுக்கு போதாது.. நமது உடல் தேவைக்காக உணவை உண்கிறோம்.. அது ஜீரணிக்கிறது இதெல்லாம் படைத்த ரப்பால் செய்ய முடியும். இது போன்று ஒவ்வொரு நிமிடமும்
அவனை நினைத்து பார்க்க
அவனது அருள் கிடைக்க நாம்
அதிகம் அதிகமாய் அல்லாஹ்க்கு நன்றிசெலுத்த
அனைவரும் அவனிடமே பிரார்த்திப்போமாக!
ஆமின்..











-WHITE.jpg)